நான்குனேரி அருகே விபத்தில் காயமடைந்த வட மாநில இளைஞர் மருத்துவமனையில் இறந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா பகுதியைச் சேர்ந்த பரதேசிசாய் மகன் சுரேந்திரசாய்(32). இவர், தனது குடும்பத்துடன் நான்குனேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.
கடந்த 11ஆம் தேதி சைக்கிளில் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனராம்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து நான்குனேரி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.