திருநெல்வேலியில் தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், சனிக்கிழமையும் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
கடும் வெப்பம், அனல் காற்று காரணமாக நண்பகலில் மாநகரின் பிரதானச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெப்பம் காரணமாக மாநகரப் பகுதியில் இளநீர், பதநீர், நுங்கு, குளிர்பானங்கள், பழச்சாறு, தர்ப்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.