மானூரை அடுத்த தேவர்குளத்தில் கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.
தேவர்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (79). கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை மாலை திருநெல்வேலி-சங்கரன்கோயில் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.