கடனாநதி அணை கோரக்கநாதர்  கோயிலில் பெளர்ணமி வழிபாடு

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடனாநதி அணைப் பகுதியில் உள்ள கோரக்கநாதர் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடனாநதி அணைப் பகுதியில் உள்ள கோரக்கநாதர் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
அனுசுயா பரமேஸ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வர சுவாமி கோரக்கநாதர் கோயிலில் பெளர்ணமி, ஆடி அமாவாசை, பிரதோஷம், வைகாசி விசாகம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, வைகாசி விசாகமும் பெளர்ணமி தினமுமான சனிக்கிழமை சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com