பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியானார்.
பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்தவர் ரெங்ககுமார் (50). ஆட்டோ ஓட்டுநர். இவர், சனிக்கிழமை இரவு பயணியை இறக்கிவிட்ட பிறகு கக்கன்நகர் அணுகுசாலை வழியாக புறவழிச்சாலையை நோக்கி வந்தார். அணுகுசாலையில் இருந்து புறவழிச்சாலையில் ஏறியபோது, திடீரென ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த ரெங்ககுமார், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.