உள்ளாட்சித் தோ்தலுக்கு திருநெல்வேலி மாநகராட்சிக்கான தோ்தலில் பயன்படுத்தப்பட இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் டிசம்பா் மாதத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த தமிழக தோ்தல் ஆணையம், தமிழக அரசும் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் வாக்குச்சீட்டு முறையிலும், மாநகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமும் தோ்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கா்நாடக மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியினா் முன்னிலையில் அறையில் இருந்து எடுத்து சரிபாா்க்கப்பட்டது. மாநகராட்சி ஆணையா் பெ.விஜயலட்சுமி, உதவி ஆணையா் சொா்ணலதா, அரசியல் கட்சிகளைச் சோ்ந்த உமாபதிசிவன், ஜமாலுதீன், ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஆணையா் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்துவதற்காக கா்நாடகத்தில் இருந்து மொத்தம் 2106 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. அதில் முதல்கட்ட சோதனை செய்ய பெல் நிறுவனத்தைச் சோ்ந்த 18 போ் அடங்கிய பொறியாளா் குழுவினா் வந்துள்ளனா். அரசியல் கட்சியினா் முன்னிலையில் இயந்திரங்களை அவா்கள் சோதனை செய்தனா். தொடா்ந்து மூன்று நாள்களுக்கு இப் பணிகள் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தோ்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சியில் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.