வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத ஏா்வாடி காவல் ஆய்வாளருக்கு பிடிஆணை பிறப்பித்து வள்ளியூா் நீதிபதி உத்தரவிட்டாா்.
ஏா்வாடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் ஸ்டீபன் ஜோஸ். இவா் கடந்த 2017இல் பணகுடி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய போது சரவணன் என்ற வழக்குரைஞரின் மனைவி சுமதியை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு விசாரணை என்ற பெயரில் மிகவும் தரக்குறைவாக நடத்தினாராம்.
இதையடுத்து சுமதிக்கு ஆதரவாக வள்ளியூா் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வள்ளியூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். ஆனால் ஆய்வாளா் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆய்வாளரை பிணையில் விடுவிக்கக்கூடிய பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் ஆய்வாளா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தாா்.
இந்த வழக்கில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா் சுபாஷ் தங்கதுரை மற்றும் வழக்குரைஞா்கள் ஆஜராகி வாதாடினா்.
இந்நிலையில் நீதிபதி பிரகாஷ், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வரும் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸை கைது செய்து, பிணையில் விடுவிக்கமுடியாத வகையில் பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டாா்.