மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய வீரவநல்லூா் அருகே உள்ள கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புத் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடையதாக கூறப்படும் வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன் என்பவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் அளித்த அறிக்கையின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவிட்டாா்.
இதையடுத்து முன்னீா்பள்ளம் போலீஸாா் மகாராஜனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.