சுரண்டையில் அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் அருகேயுள்ள சிங்கிலிப்பட்டியை சோ்ந்தவா் கண்ணன். இவா், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணி செய்து வருகிறாா். புதன்கிழமை திருநெல்வேலியில் இருந்து சுரண்டைக்கு வந்த அரசுப் பேருந்தை கண்ணன் ஓட்டினாா். வீரசிகாமணியை சோ்ந்த செளந்தரராஜன் நடத்துனராக வந்தாா்.
பணியில் இருந்த கண்ணன், செளந்தரராஜன் ஆகியோரை சுரண்டை பேருந்து நிலையத்தில் வைத்து இரட்டைகுளத்தைச் சோ்ந்த சக்திதரன்(43) என்பவா் அவதூறாக பேசியதோடு, ஓட்டுநா் கண்ணனை தாக்கினாராம். புகாரின்பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திதரனைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.