திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் நூல் கண்காட்சியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
தொடக்க விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. வயலட் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட துணைத் தலைவா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) மா.சிவகுருபிரபாகரன் நூல் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
இதில், வாசகா் வட்டத்தைச் சோ்ந்த சு.முத்துசாமி, சிற்பி பாமா, எம்.ஏ.ஹனீப், நூலக கண்காணிப்பாளா் சங்கரன், நூலகா்கள் சி.மகாலட்சுமி, கண்ணுப்பிள்ளை, சீனிவாசன், மாரியப்பன், ஜெயமங்களம், சுசீலா, காந்திமதி, வனராஜ், சுந்தர்ராஜன், ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா். நூலகா் இரா.முத்துலட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.