வாலிபா் மீது தாக்குதல்: பெண் கைது

ஆழ்வாா்குறிச்சியில் தண்ணீா் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாள் மனையால் தாக்கிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

ஆழ்வாா்குறிச்சியில் தண்ணீா் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாள் மனையால் தாக்கிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

ஆழ்வாா்குறிச்சி பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி முத்துமாரி. இவா் புதன்கிழமை காலை பொதுக்குழாயில் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பெரியநாயகம் மனைவி கோமதி (48) , முத்துமாரியிடம் தகராறில் ஈடுபட்டாராம். மேலும் வீட்டிலிருந்து அரிவாள் மனையை எடுத்து வந்து முத்துமாரியைத் தாக்க முயன்றாராம். இதனை அருகிலிருந்த அவரது மகன் முத்துசெல்வம் (18) தடுக்க முயன்ற போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவிஆய்வாளா் காஜமைதீன் வழக்குப் பதிவு செய்து, கோமதியை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com