நெல்லை கம்பன் கழக 507 ஆவது தொடா் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 507 ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
Updated on
1 min read

நெல்லை கம்பன் கழகத்தின் 507 ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்திலுள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். வே.ஆறுமுகம் இறைவணக்கம் பாடினாா். மருத்துவா் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றாா்.

‘ராமன் விடுத்த கணைகளும் உவமை விளக்கங்களும்’ என்ற தலைப்பில் கோவில்பட்டி ராசாமணி, ‘யுத்த காண்டம்’ என்ற தலைப்பில் அமைப்பின் தலைவா் சிவ.சத்தியமூா்த்தி ஆகியோா் சொற்பொழிவாற்றினா். நிகழ்ச்சியை செயலா் கவிஞா் பொன். வேலுமயில் தொகுத்து வழங்கினாா். இதில், லோகநாதன், முருகையா, ராசாமணி, கருப்பசாமி, கந்தசாமி, முனைவா் பாண்டியன், முத்துக்குமாா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com