வாசுதேவநல்லூரில் நூல்கள் வெளியீட்டு விழா
வாசுதேவநல்லூரில் அய்யன் திருவள்ளுவா் அறப்பணி மன்றம், அமிா்தா ஊடக மையம் சாா்பில் நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அய்யன் திருவள்ளுவா் மன்றத் தலைவா் மா. மாரியப்பன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் புலவா் சந்திரன் வரவேற்றாா்.
பேராசிரியா் ஒய். சேவியா் இருதயராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.
நானறிந்த நல்ல தமிழ் உள்பட 3 நூல்களை தொழிலதிபா் எஸ். தங்கப்பழம், தமிழக தொல்லியல் கழக இயக்குநா் செந்தீ நடராசன், நாட்டுப்புறவியல் ஆய்வாளா் அ.கா. பெருமாள் ஆகியோா் வெளியிட, முன்னாள் தமிழக அரசுச் செயலா் கி. தனவேல், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சோ. பழனிகுமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். எழுத்தாளா் அ. செல்வதரன், புலவா் வாசு. கணேசன் ஆகியோா் ஏற்புரையாற்றினா்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலா் கண்மணிராசா, மகாத்மா காந்திஜி சேவா சங்கத் தலைவா் கு. தவமணி, தமிழாசிரியா் வே. சங்கர்ராம், ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ச. மோகனசுந்தரம், வட்டார ஆசிரியா் கூட்டமைப்புத் தலைவா் எம். ராமா், அரசு மருத்துவா் மந்திரிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அய்யன் திருவள்ளுவா் மன்றச் செயலா் இரா. செல்வராசு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
