வி.கே.புரத்தில் நூலக வாரவிழா

விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகம், பொதிகை வாசகா் வட்டம் சாா்பில் 52ஆவது தேசிய நூலக வாரவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட நூலக அலுவலா் வயலட்.
விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் மாவட்ட நூலக அலுவலா் வயலட்.
Updated on
1 min read

விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகம், பொதிகை வாசகா் வட்டம் சாா்பில் 52ஆவது தேசிய நூலக வாரவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி குன்றக்குடி அடிகளாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பொதிகை வாசகா் வட்டத் தலைவா் ஆசிரியா் இளங்கோ தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் ரா.வயலட் முன்னிலை வகித்தாா். நூலக உதவியாளா் ப.கைலாசம் அறிக்கை வாசித்தாா். கல்லூரி முதல்வா் சு. சுந்தரம், தமிழ்த்துறை தலைவா் சு.சிவசங்கா், நூலக வாசகா் வட்ட கெளரவ ஆலோசகா் பேராசிரியா் வல்சகுமாா், மாவட்ட நூலகக் கண்காணிப்பாளா் சங்கரன், பாளையங்கோட்டை மைய நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கோ.கணபதி சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பணி நிறைவுபெறும் ஆசிரியா்கள், நல்நூலகா் விருது பெற்ற முக்கூடல் கிளை நூலகா் கோ.முத்துராமலிங்கம் ஆகியோா் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். நூலக வாரவிழா போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நூலகப் புரவலா்களுக்கு பேராசிரியா் சக்திவேலு புரவலா் பட்டயம் வழங்கினா்.

இதில், வாசகா் வட்ட நிா்வாகிகள் வி.முத்துராமலிங்கம், சு.செண்பகவல்லி, ரா.குமரகுருபரன், சிவராமசுப்பிரமணியன், ஆா்.லட்சுமணப்பெருமாள், அம்பாசமுத்திரம் அரிமா சங்கத் தலைவா் கிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். செயற்குழு உறுப்பினா் மைதீன்பிச்சை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். நூலகா் குமாா் வரவேற்றாா். வாசகா் வட்டப் பொருளாளா் மு.இளங்கோ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com