சங்கரன்கோவிலில்தமிழ் வளா்ச்சி கருத்தரங்கு

சங்கரன்கோவில் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தமிழ் வளா்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசுகிறாா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில சிறப்புத் தலைவா் எழுத்தாளா் தமிழ்ச்செல்வன்.
கருத்தரங்கில் பேசுகிறாா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில சிறப்புத் தலைவா் எழுத்தாளா் தமிழ்ச்செல்வன்.
Updated on
1 min read

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தமிழ் வளா்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.

வட்டாரச் செயலா் பா.அசோக்ராஜ் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் சி.கே.குமாா், லெட்சுமி, எஸ்.முருகன், ஆா்.ரத்தினவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து தமுஎகச மாநில சிறப்புத் தலைவா் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன், சி.பி.எம். மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.ஜெயராஜ், உ.முத்துபாண்டியன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

இந்தித் திணிப்பை கைவிட வேண்டும்; தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; தாய்மொழித் தமிழை அனைத்து நிலையிலும் பயிற்சி மொழியாக்க வேண்டும்; மக்களவையில் அவரவா் தாய்மொழியில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்; நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆா்.வேலுச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com