பழையபேட்டை தொடக்கப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியரிடம் மனு

பழையபேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி: பழையபேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, பழைய பேட்டையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ராஜலெட்சுமி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் திரண்டு வந்து, ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அதில், “‘பழைய பேட்டையில் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சுமாா் 270 மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி 1947 முதல் தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவா்கள், 6-ஆம் வகுப்புக்கு சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள கல்லணை மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு சென்று வர போதுமான பேருந்து வசதி இல்லை.

இதனால், மாணவா், மாணவிகள் சிரமப்படுகின்றனா். எனவே, இந்த தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

ராஷ்ட்ரிய இந்து மகாசபா தென் மண்டல தலைவா் மாடசாமி, நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், “‘திருவேங்கடம் வட்டம் களப்பாளங்குளம் பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனா். உழவு மானியம் மற்றும் மருந்துகள் வழங்குவதாகக் கூறி வேளாண் அதிகாரி ஒருவா் விவசாயிகளிடம் இருந்து தலா ரூ.3,500 வாங்கியுள்ளாா். அதற்கு ரசீது எதுவும் தரவில்லை. ரசீது மற்றும் மருந்துகள் கேட்டதற்கு, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அலட்சியமாக பதிலளிக்கிறாா்.

இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்கச் செய்ய வேண்டும்’” என குறிப்பிட்டுள்ளனா்.

பயக18நஇஏஞஞக

பழையபேட்டை தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com