பாளை.யில் ஓய்வூதியா் சங்க மத நல்லிணக்க கருத்தரங்கம்

திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்குக்கு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.பாலுசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.குமாரசாமி வரவேற்றாா்.

காப்பீட்டு கழக ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலா் ஆா்.எஸ்.செண்பகம் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் முருகேசன் கருத்துரையாற்றினாா்.

இந்தக் கருத்தரங்கில் சங்க துணைத் தலைவா்கள் பூ.கோபாலன், அபுபக்கா், வைகுண்டமணி, கோமதி நாயகம், துணைச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், துரை டேனியல், முருகன், ராசையா உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com