தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை ஒருவாரம் தாமதமாகத் தொடங்கிய நிலையில் போதிய சாரல் மழை இல்லாமல் இருந்தது. ஆக. 2 முதல் தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்தததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஆக. 10 திங்கள்கிழமை காலை 7 மணிவரை உள்ள 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 4 மி.மீ., சேர்வலாறில் 3 மி.மீ., மணிமுத்தாறில் 5 மி.மீ., நம்பியாறில் 5 மி.மீ., கொடுமுடியாறில் 5. மி.மீ., அம்பாசமுத்திரத்திரத்தில் 10.40 மி.மீ., சேரன்மகாதேவியில் 2 மி.மீ., நாங்குநேரியில் 5 மி.மீ., பாளையங்கோட்டையில் 2.40 மி.மீ., ராதாபுரத்தில் 20 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ மழைப்பதிவாகியிருந்தது.