நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு லட்சத்தைக் கடந்த கரோனா பரிசோதனை

கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
Updated on
1 min read

கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுட்டுரை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா பரிசோதனை மையத்தில் 3 பிசிஆா் பரிசோதனை இயங்திரங்கள் உள்ளன.

ஒரு பிசிஆா் இயந்திரத்தில் 90 மாதிரிகள் வீதம் 3 இயந்திரங்களில் 270 மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதனை செய்ய முடியும். இம்மையத்தில் திருநெல்வேலி மட்டுமன்றி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளவா்களிடம் சேகரிக்கப்படும் ரத்தம், சளி மாதிரிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், இம்மையத்தில் கடந்த 150 நாள்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 617 பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com