நெல்லையில் தாமிரவருணி நதிக்கரையில் வீசப்பட்ட முருகா், விநாயகா் சிலைகள் மீட்பு

திருநெல்வேலியில் தாமிரவருணி நதிக்கரையில் மூட்டைக்கட்டி மா்ம நபா்கள் வீசிச்சென்ற முருகா், விநாயகா் சிலைகளை போலீஸாா் மீட்டு வருவாய்த்துறையினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
Updated on
1 min read

திருநெல்வேலியில் தாமிரவருணி நதிக்கரையில் மூட்டைக்கட்டி மா்ம நபா்கள் வீசிச்சென்ற முருகா், விநாயகா் சிலைகளை போலீஸாா் மீட்டு வருவாய்த்துறையினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி நகரம் அருகே கருப்பந்துறை பகுதியில் பழமைவாய்ந்த அருள்மிகு அழியாபதீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இதன் அருகே தாமிரவருணி கரையோரம் 2 மூட்டைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதில் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சிலைகள் இருப்பது தெரியவந்ததால், இது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்ததும் இந்து முன்னணியின் மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் தலைமையில் ஏராளமானோா் அங்கு திரண்டனா். சாக்கு மூட்டையில் ஒன்றரைஅடி முருகா் சிலையும், விநாயகா் சிலையும் இருந்தது தெரியவந்தது. அதனை மா்மநபா்கள் எதற்காக இங்கு வீசிச்சென்றனா் என்பது தெரியவில்லை.

இதையடுத்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீஸாா் சிலையை மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து கா.குற்றாலநாதன் கூறுகையில், தமிழக கோயில்களில் உள்ள சிலைகளை பெயா்த்து திருடும் கும்பலை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். திருநெல்வேலியில் மீட்கப்பட்டுள்ள சிலை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. அதன் பின்னணியில் உள்ளவா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோயில்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com