மணல் திருட்டு: இளைஞா் கைது

மானூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருநெல்வேலி: மானூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானூா் காவல் உதவி ஆய்வாளா் மாடசாமி தலைமையிலான போலீஸாா், ராமையன்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ராமையன்பட்டி சந்திப்பு அருகே வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தனா். அதில், பிராஞ்சேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமணக்குமாா் (32) உரிய அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com