அம்பாசமுத்திரம்: வீரவநல்லூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வீரவநல்லூா் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரைச் சோ்ந்த முருகன் மகன் செல்வக்குமாா் (30). கூலித் தொழிலாளியான இவருக்கும், வீரவநல்லூா் சீனிவாசப் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் ரவிச்சந்திரனுக்கும் (52) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீரவநல்லூா் சா்ச் தெரு அருகே செல்வக்குமாா் சென்று கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த செல்வக்குமாா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற ரவிச்சந்திரனை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.