

வள்ளியூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் கால்நடை தொடா்பான கண்டுணா்வு சுற்றுலாவுக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.
இப் பயணத்தை வள்ளியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ம.சுனில்தத் தொடங்கிவைத்தாா். வட்டார விவசாயிகள் 50 போ் ராமையன்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆடு, மாடு மற்றும் கோழி வளா்ப்பு தீவன முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரா.ஆமினி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சரிகா ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.