களக்காடு ஒன்றிய கிராமங்களில் எம்எல்ஏ ஆய்வு

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெடுவிளை, சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களில் நான்குனேரி எம்எல்ஏ வெ. நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

களக்காடு: களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெடுவிளை, சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களில் நான்குனேரி எம்எல்ஏ வெ. நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இடையன்குளம் ஊராட்சி நெடுவிளை தெருக்களில் உள்ள மிகவும் பழுதான சாலைகளைச் சீரமைக்கக் கோரியும், புலியூா்குறிச்சி ஊராட்சி சீனிவாசபுரத்தில் கால்வாய் உடைந்து தெருக்களில் தண்ணீா் தேங்குவதாகவும் இரு கிராம மக்களும் எம்எல்ஏவிடம் மனு அளித்தனா். இதையடுத்து, எம்எல்ஏ நாராயணன் அந்தக் கிராமங்களுக்கு சென்று, சாலைகளையும், கால்வாய் உடைப்பையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com