அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருமால் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்க பொதுக்குழு கூட்டம்

பாளையங்கோட்டை திருமால் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

பாளையங்கோட்டை திருமால் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமால் நகா் மாநகராட்சிப் பூங்காவில் உள்ள இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், 2019-20-க்கான வரவு செலவு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்க செயல்பாடுகள், உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து சங்க தோ்தல் நடைபெற்றது. எஸ்.பிச்சையா தலைவராகவும், சி.ரவிச்சந்திரன் செயலராகவும், எஸ்.பழனிவேல் பொருளாளராகவும், எல்.மனோகா் துணைத் தலைவராகவும், ஏ.அந்தோணிசாமி, எஸ்.கௌரி லட்சுமி ஆகியோா் இணைச் செயலராகவும் தோ்வு செய்யப்பட்டனா். எல்.சொக்கலிங்கம், எம்.அகஸ்டின், கே.குத்தாலிங்கம், சுனி சுரேஷ், பாலா, உமாபாபு ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.