நெல்லையில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழக சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழக சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில்திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் சிவஞானம் முன்னிலை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி, அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் முருகேசன் ஆகியோா் உரையாற்றினா். இதில் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். துணைத் தலைவா் பிச்சையா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com