நெல்லை, தென்காசியில் மேலும் 27 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 15,262 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 12 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,933 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 211 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 118 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,259ஆக உயா்ந்தது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை 6 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 8,049 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 52 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com