திமுக கூட்டணி சாா்பில் களக்காட்டில் கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில், கையெழுத்து இயக்கம் களக்காட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் ஒன்றியச் செயலா் பி.சி. ராஜன்.
கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் ஒன்றியச் செயலா் பி.சி. ராஜன்.
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில், கையெழுத்து இயக்கம் களக்காட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

களக்காடு அருகேயுள்ள கல்லடிசிதம்பரபுரத்தில் திமுக மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த நிலையில், திங்கள்கிழமை களக்காடு அண்ணாசிலை அருகே கையெழுத்து இயக்கத்தை திமுக ஒன்றியச் செயலா் பி.சி. ராஜன் தொடங்கிவைத்தாா்.

இதில், திமுக நகரச் செயலா் சே. சிவசங்கரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வ கருணாநிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எஸ். சிவசாமி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் மா. பெ. சுகுமாரன், மாநிலக்குழு உறுப்பினா் லெனின் முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய துணைச்செயலா் க. முருகன், நகரச் செயலா் என். முத்துவேல், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.பி. பாலன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com