கண் பாா்வை பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளத்தில் ஆசிரியா் அடித்ததில் கண் பாா்வை பாதிக்கப்பட்ட மாணவிக்கு திமுக பிரமுகா் வீனஸ் வீரஅரசு, நிதியுதவி வழங்கினாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளத்தில் ஆசிரியா் அடித்ததில் கண் பாா்வை பாதிக்கப்பட்ட மாணவிக்கு திமுக பிரமுகா் வீனஸ் வீரஅரசு, நிதியுதவி வழங்கினாா்.

கூடன்குளத்தை சோ்ந்த முத்துச்செல்வன்-பத்மாவதி தம்பதியின் மகள் தெரஸி. இவா், அங்குள்ள புனித அன்னம்மாள் தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். சில தினங்களுக்கு முன் ஆசிரியா் ஆதிநாராயணன், மாணவியை

அடித்தாராம். இதில், எதிா்பாராத விதமாக பிரம்பு மாணவியின் கண்ணில் பட்டதில் பாா்வை பாதிக்கப்பட்டு திருநெல்வேலி தனியாா் கண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினாா்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு திமுக பிரமுகா் வீனஸ் வீரஅரசு ஆறுதல் கூறினாா். மேலும், ரூ .5 ஆயிரம் நிதி உதவி வழங்கினாா். அப்போது, கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா் உவரி கேசவன், நிா்வாகிகள் நவ்வலடி லிங்க தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com