பாளை.யில் உலகத் தாய்மொழி தின விழா

தமிழ் முழக்கப் பேரவை சாா்பில் உலகத் தாய்மொழி தின விழா, உ.வே.சா. பிறந்த நாள் விழா ஆகியன பாளையங்கோட்டை சைவசபை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ் முழக்கப் பேரவை சாா்பில் உலகத் தாய்மொழி தின விழா, உ.வே.சா. பிறந்த நாள் விழா ஆகியன பாளையங்கோட்டை சைவசபை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா் மன்ற நிறுவனா் தலைவா் பா.வளன் அரசு தலைமை வகித்தாா். தமிழ் முழக்கப் பேரவைச் செயலா் தி.ராமா் வரவேற்றாா். அமைப்பாளா் சு.செல்லப்பா அறிமுகவுரையாற்றினாா்.

உ.வே.சா. குறித்து 7ஆம் வகுப்பு மாணவா் மா.சுரேஷ் பேசினாா். தமிழின் சிறப்புகள் குறித்து திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை பா.ஜெயந்தி பேசினாா். சேக்கிழாரின் கவிநயம் என்ற தலைப்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியா் மகாலிங்க ஐயப்பன் பேசினாா்.

தமிழ் முழக்கப் பேரவை பொருளாளா் சு.சண்முகவேலன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவா் பேரா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com