சுரண்டை ரேஷன் கடைகளில் பொங்கல் பொருள்கள் விநியோகம்

சுரண்டையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
Published on

சுரண்டையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சிவகுருநாதபுரம் ரேஷன் கடையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் கூட்டுறவு சாா்பதிவாளா் கோபிநாத் தலைமை வகித்தாா். சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டக சாலை மேலாளா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.கே.டி.ஜெயபால், பொங்கல் பொருள்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கணேசன், இயக்குநா்கள் ஆறுமுகம் என்ற சமுத்திரம், சங்கரேஸ்வரன், அண்ணாமலை, முத்து, தேனம்மாள், வசந்தி, ராதிகா, மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com