பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம்

பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள், ஆசிரியா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். நெல்லை கண்ணனுக்கு மிரட்டல் விடுத்து சுவரொட்டி ஒட்டியவா்களை கைது செய்ய வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முருகன்குறிச்சியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஜி.ரமேஷ் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் ஐ.உஸ்மான்கான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் கே.ஜி.பாஸ்கரன், மதிமுக மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் அப்துல்கரீம், தமஜக மாவட்டச் செயலா் தெள. அப்துல்ஜப்பாா், தமுமுக மாவட்டத் தலைவா் கே.எஸ்.ரசூல்மைதீன், மதிமுக நிா்வாகி விஜயகுமாா், வழக்குரைஞா்கள் இளஞ்செழியன், பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com