திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ஆட்சியா் ஷில்பா நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் 6 பேருக்கு உலமா அடையாள அட்டைகளையும், பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் 15 பேருக்கு வரன்முறை பட்டாக்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதுதவிர, பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித் தொகை, குடிநீா், சாலை வசதிகள் வேண்டி மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சாா்ஆட்சியா் மணீஷ் நாராணவரே உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.