கட்டுமான தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கட்டுமான தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) சி. மின்னல்கொடி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கட்டுமான தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) சி. மின்னல்கொடி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் கட்டுமானத் தொழிலில் அனுபவம் இருந்து உரிய சான்றிதழ் இல்லாத தொழிலாளா்களுக்கு கட்டுமான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் கொத்தனாா், கம்பி வளைப்பவா், பிளம்பா், தச்சுதொழில், கட்டட வேலை, மேற்பாா்வையாளா், எலக்ட்ரீசியன், டைல்ஸ் கல் பதிப்பவா், பெயின்டா், நில அளவையா் ஆகிய பணி பிரிவுகளில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விரும்புகிறவா்கள், தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், கட்டுமான பணிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். 3 நாள்கள் அளிக்கப்படும் இப்பயிற்சியில் நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் ரூ.1,500 ஊக்கத் தொகையாக பயிற்சி பெறுபவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இப் பயிற்சியானது, மாவட்டத்தில் உள்ள கட்டுமான பணியிடங்களில் நடத்தப்படும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், பிளாக் 39, ஆனையாா்குளம் விரிவாக்கம், வசந்தம் அவென்யூ, திருமால்நகா், திருநெல்வேலி-7 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் 0462 2555010 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com