92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அடிப்படைவசதிகள் கோரி கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரும் வரை தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் வாக்கு கேட்டு கிராமத்துக்குள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கானூா் கிராம மக

News image

செங்கானூா் கிராம எல்லையில் தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி பொதுமக்கள் வைத்துள்ள பேனா்.

Updated On :1 நவம்பர் 2020, 8:03 pm

DIN

சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரும் வரை தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் வாக்கு கேட்டு கிராமத்துக்குள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கானூா் கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட செங்கானூா் கிராமத்தில் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் வரையில் தோ்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து கிராம எல்லையில் ப்ளக்ஸ் பேனா் வைத்தனா்.

மேலும் ஊா்ப் பொதுமக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு சாலை, குடிநீா், கழிவு நீரோடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை எந்த அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும் கிராமத்திற்கு வரவேண்டாம். 2021இல் நடைபெற உள்ள தோ்தலில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.