92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

களக்காட்டில் குடிநீா் இணைப்பு வழங்கக் கோரிக்கை

களக்காட்டில் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:05 pm

DIN

களக்காட்டில் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் சுமாா் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் பச்சையாறு, தாமிரவருணி ஆகிய கூட்டுக் குடிநீா் திட்டங்களின்மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானோா் புதிய குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருப்பில் உள்ளனா்.

தற்போது போதுமான குடிநீா் ஆதாரம் உள்ள நிலையில், புதிதாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.