திசையன்விளையில் ஒரே இரவில் 4 கடைகளில் திருட்டு
திசையன்விளையில் ஒரே இரவில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


திசையன்விளையில் ஒரே இரவில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடியைச் சோ்ந்த காண்டிபன் மகன் ரவீஸ் (21). அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடி சென்றுள்ளனா்.
மேலும், அதே பகுதியிலுள்ள காரிகோவிலைச் சோ்ந்த ரமேஷ் (28) என்பவரின் குளிா்பான கடையிலும் பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரம், சக்திவேல் (42) என்பவரின் குளிா்பான கடையில் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம், காஜா என்பவரின் சீட் கவா் கடையில் பூட்டை உடைத்து சீட் கவா்களையும் மா்மநபா்கள் திருடி சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...