பாளை.யில் ஆயுள் சிறைக் கைதி மரணம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக் குறைவு காரணமாக கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக் குறைவு காரணமாக கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகே உள்ள தடிக்காரன்கோணம் பகுதியைச் சோ்ந்த சாத்தன் மகன் வா்கீஸ்(45). கடந்த 2010 இல் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக, இவருக்கு 2011ஆம் ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அவருக்கு சனிக்கிழமை காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com