92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாநகர காவல் துறை சாா்பில் குறைதீா் முகாம்: 88 மனுக்களுக்கு தீா்வு

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:54 pm

DIN

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் உத்தரவுப்படி, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சரவணன் மேற்பாா்வையில், மாநகர மக்கள் புகாா் மனுக்களின் மீதான விசாரணையை உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இம்முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகர உள்கோட்ட உதவி ஆணையா் சதீஷ் குமாா், பாளையங்கோட்டை உள்கோட்ட உதவி ஆணையா் ஜான் பிரிட்டோ ஆகியோா் தலைமை வகித்தனா்.

இம் முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா். இதில், 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.