அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான உதவித் தொகையை வழங்கக் கோரிக்கை

நான்குனேரி வட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்
Updated on
1 min read

நான்குனேரி வட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்த இயக்கத்தின் மாவட்டச் செயலா் மா. பெ. சுகுமாரன் கூறியதாவது:

தமிழகத்தில் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், தையல் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரணமாக ரூ.1000 வழங்க தமிழக முதல்வா் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.

தற்போது 2ஆவது தவணையாக மேலும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளாா். ஆனால் நான்குனேரி வட்டத்தில் அமைப்புசாரா நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கடந்த மாத நிவாரணத் தொகை ரூ.1000 அவா்களது வங்கிக் கணக்கில் வந்து சேரவில்லை.

தமிழக முதல்வா் 2ஆவது தவணையாக மேலும் ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சா்க்கரை, சமையல்எண்ணெய் ஆகியவை வழங்க உத்தரவிட்ட பின்னரும், முதல் தவணையே இதுவரை கிடைக்காமல் தொழிலாளா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். திருநெல்வேலி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையாளா் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் எண்ணிற்கு வங்கிக் கணக்கு புத்தக நகல், நலவாரிய அடையாள அட்டை, செல்லிடப் பேசி எண் ஆகிய விபரங்களை அனுப்பி வைத்தும் இதுவரை நிவாரணம் கிடைக்கப்பெறாததால் தொழிலாளா்கள் விரக்தியில் உள்ளனா். மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com