பாளை.யில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th August 2020 01:50 PM | Last Updated : 26th August 2020 01:50 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி கிளை சாா்பில் ஜெபா காா்டன் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பேரிடா் காலத்தில் வருமான வரி வரம்புக்குள் வராத மக்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும்; ரேஷன் பொருள்கள் அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும்; நூறு நாள் வேலைத் திட்ட ஊதியத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.பழனி, பாளை. தாலுகா செயலா் பி. வரகுணன், கமிட்டி உறுப்பினா் ஆா். துரை, கிளைச் செயலா் டி. கோபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...