பாளையங்கோட்டையில் மாயமான மூதாட்டி தாமிவருணி நதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பாளையங்கோட்டையில் உள்ள தில்லை கூத்தனாா் தெரு முருகன் மனைவி கல்யாணி (65). இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். கடந்த 28 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவா் மாயமானாராம். இதுகுறித்து அவரது மகன் முத்துகணேசன் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.
இதற்கிடையே திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் சடலமாகக் கிடந்தவா் ஏற்கெனவே மாயமான கல்யாணி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.