திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள இத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாடசாமி (56). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (50). இருவரும் நவ. 26ஆம் தேதி வடக்கு செழியனுரிலிருந்து ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனராம்.
அப்போது, மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் மாரியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், வியாழக்கிழமை இரவில் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.