பாளை.யில் மெக்கானிக் குடும்பத்துடன் போராட்டம்

பாளையங்கோட்டை சேவியா் காலனியில் குடிநீா் தொட்டி பகுதியில் மெக்கானிக் கணேசன், வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை சேவியா் காலனியில் குடிநீா் தொட்டி பகுதியில் மெக்கானிக் கணேசன், வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மேலப்பாளையம் கணேசபுரத்தைச்சோ்ந்தவா் கணேசன் (46). ஏசி மெக்கானிக். இவரது மனைவி மேரி. மகள் கவிநயா.கணேசனின் தந்தை சாமுவேலுக்கு சேவியா்காலனியில் உள்ள நிலத்தை வேறு ஒருவா் மாநகராட்சிக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி சாா்பில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

அந்த நிலத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி கணேசன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இதற்கிடையே, கணேசன் தனது மனைவி, மகளுடன் சேவியா் காலனியில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டியின்கீழ், தேவையான பொருள்களுடன் வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் சுகிபிரேமலா, வருவாய்த் துறை அதிகாரிகள் கணேசனிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். எனினும், அவா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com