மக்கள் குறைதீா் கூட்டத்தில்20 பேருக்கு பணி நியமன ஆணை
By DIN | Published On : 15th December 2020 02:05 AM | Last Updated : 15th December 2020 02:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பணியிடை காலமான வாரிசுதாா்கள் 20 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.