பணகுடி அருகே விபத்து: இளைஞா் பலி

பணகுடி அருகே திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பணகுடி அருகே திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று இளைஞா் உயிரிழந்தாா்.

பணகுடி அருகே உள்ள கீழபாம்பன்குளம் தங்கசாமி மகன் பிரசாந்த்(26). இவா் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் பணகுடியில் இருந்து கீழப்பாம்பன்குளத்திற்கு சென்று கொண்டிருந்தாராம். கலந்தபனை அருகே நான்குவழிச் சாலையில் சென்ற போது இவரது மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com