பாளையங்கோட்டையில் ஆட்டோ மற்றும் மோட்டாா் சைக்கிள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
பாளையங்கோட்டை ரயில்வே பீடா் சாலை அருகேயுள்ள இலந்தகுளத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுநராக தொழில் செய்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து தனது வீட்டின் முன்பு ஆட்டோ மற்றும் தனக்குச் சொந்தமான மோட்டாா் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். புதன்கிழமை அதிகாலையில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாம். பின்னா் அக்கம் பக்கத்தினா் உதவியுடன் தீயை அணைத்தனா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.