திருநெல்வேலி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், விவேகானந்தா கேந்திரம், பிரானூா், பாா்டா் மரம், விறகு வியாபாரிகள் மற்றும் சாமில் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் செங்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு சாமில் உரிமையாளா்கள் சங்கச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கேந்திரத்தைச் சோ்ந்த மணிமகேஸ்வரன், ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணி ராம்மோகன், காவல் உதவி ஆய்வாளா் மாரிச்செல்வி, கேந்திர மாவட்ட மகளிரணி பொறுப்பாளா் தமிழரசி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினா், நோயாளிகளைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். இதில், 22 பேருக்கு இலவச கண்கண்ணாடி வழங்கப்பட்டன. 37 போ் புரை அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டனா். சமூக ஆா்வலா்கள் தனபால், பேச்சிமுத்து, ஐயப்பன், மலையாண்டி, சிதம்பரம், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.