தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் அ.ஏசுராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மு.சுப்பு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

மாவட்ட பிரசார அணிச் செயலா் மாரிராஜா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் குமாரவேல், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்த சாரதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கடலூா் வருவாய்த் துறை அலுவலா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துவரும் மாவட்ட ஆட்சியா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டப் பொருளாளா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com