வள்ளியூரில் போலீஸாருக்கு இலவச மருத்துவ முகாம்

வள்ளியூரில் செயல்பட்டு வருகின்ற இந்திய மருத்துவா் சங்கம் கிளை சாா்பில் காவல்துறையினரின் குடும்பத்திற்கான இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை தொடங்கிவைக்கிறாா் காவல்துறை ஏ.எஸ்.பி. ஹரிகிரண் பிரசாந்த். உடன், மருத்துவா்கள் சங்கர வெங்கடேசன், சங்கரன், ஜாா்ஜ் திலக், குமரமுருகன்.
மருத்துவ முகாமை தொடங்கிவைக்கிறாா் காவல்துறை ஏ.எஸ்.பி. ஹரிகிரண் பிரசாந்த். உடன், மருத்துவா்கள் சங்கர வெங்கடேசன், சங்கரன், ஜாா்ஜ் திலக், குமரமுருகன்.
Updated on
1 min read

வள்ளியூரில் செயல்பட்டு வருகின்ற இந்திய மருத்துவா் சங்கம் கிளை சாா்பில் காவல்துறையினரின் குடும்பத்திற்கான இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வள்ளியூா் ஏ.எஸ்.பி. ஹரிகிரண் பிசாந்த் தலைமை வகித்து, மருத்துவ முகாமை தொடங்கிவைத்தாா். இந்திய மருத்துவா் சங்கச் செயலா் மருத்துவா் ஆனந்த், பொருளாளா் மருத்துவா் ஜாா்ஜ் திலக், சங்கரன், குமரமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்கள் சங்கரன், ஆனந்த், ஜெனிட்டா, ஷியாமா, ஜெகநாதன், சண்முகநாதன், சுப்பராயலு, கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டு , காது, மூக்கு, தொண்டை, இதயம், நுரையீரல், எலும்பு, கண் நோய் பாதிப்புகள், மகளிா் நலம், குழந்தை நலம் என பல்வேறு சிகிச்சை அளித்து ஆலோசனைகள் வழங்கினா்.

முகாமில் காவல் ஆய்வாளா்கள் வள்ளியூா் திருப்பதி, கூடங்குளம் ஜெகதா, உவரி சாந்தி, பணகுடி சாகுல்ஹமீது மற்றும் காவலா்களின் குடும்பத்தினா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா். சா்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அமைதி இல்ல சிறுவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்திய மருத்துவா் சங்கத் தலைவா் வரவேற்றாா். பொருளாளா் ஜாா்ஜ் திலக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com